KRYSS Network ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு மலேசியாவில், குறிப்பாக பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக நிகழும் சமமற்ற, பாகுபாடான கருத்து, பேச்சு சுதந்திரத்தைக் கவனித்து ஆய்வு செய்கிறது. எங்கள் பணி, அனைவரும் நிகழ்நிலையில் எந்தத் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கான பயம் இல்லாமல் தங்கள் வாழ்க்கை இயல்புகள், அனுபவங்கள், கருத்துகள் மற்றும் எண்ணங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த இணையத்தளம் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிப்படுத்துவது.
நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறைகளைக் (OGBV) களைய, அதற்கான ஆதாரங்களையும் அறிவையும் மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு படியாக, நடக்கும் வன்முறைகளை ஆவணப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கம். நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறை என்பது தொழில்நுட்பம் மூலமாக மக்கள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள், ந,ந,ஈ,தி (நங்கை, நம்பி, ஈரர், திருனர்)/பால்புது (LGBTQ) ஆகிய சமூகத்திற்க்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் மற்றும் தீங்குகள் ஆகும்.
நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறையின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் (அல்லது குற்றம் புறிந்தவருக்கும்) தனிப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறையின் அனுபவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் மற்றும்/அல்லது கடினமாக இருக்கலாம் என்பதால், உங்களால் முடிந்தவரையிலான தகவல்களைப் பகிரலாம். மலேசியாவை இவ்வன்முறை இல்லா நாடாக்குவதை ஆதரித்து உதவும் உங்கள் விருப்பத்திற்கு நன்றிகள்.
